ஆர்ப்பாட்டப்பேரணி மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்!

பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணி மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


கொழும்பு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணி மீதே இன்று(செவ்வாய்கிழமை) மாலை இவ்வாறு  நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது அலுவலக செய்தியாளர் குறிப்பிட்டார்.

அனைத்து பல்கலைகழக மாணவர்கள் அமைப்பினால் குறித்த பேரணி இன்று நண்பகல் கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக வேட் பிளேஸ் மற்றும் நகர மண்டபம் பகுதிகளில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.