‘9 நிமிடத்தில் 6 குழந்தைகளைப் பெற்ற பெண்!’

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹியூஸ்டன் நகரைச் சேர்ந்த பெண் ஒருவர், ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகளைப் பெற்றுள்ளார். தாயும் குழந்தைகளும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


தெல்மா சியாகா என்ற பெண், பிரசவத்துக்காக டெக்சாஸில் உள்ள தனியார் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சில தினங்களுக்கு முன் ஆறு குழந்தைகள் பிறந்துள்ளன. அதில் நான்கு ஆண்  குழந்தைகள், இரண்டு பெண் குழந்தைகள். அதிகாலை 4.50 முதல் 4.59 மணிக்குள், அதாவது 9 நிமிடங்களுக்குள் ஆறு குழந்தைகளும் அடுத்தடுத்து பிறந்துள்ளன.

'குழந்தைகள் 790 முதல் 850 கிராம் எடையில் இருக்கின்றனர். அனைவரும் நலமாக உள்ளனர். இருந்தாலும் அனைத்துக் குழந்தைகளும் பச்சிளங்குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு,  தொடர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்' என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இரண்டு பெண் குழந்தைகளுக்கும் ஸினா, ஸுரியல் என்று பெயர் வைத்துள்ளார் தாய் தெல்மா.  மீதமுள்ள நான்கு ஆண் குழந்தைகளுக்கும் என்ன பெயர் வைப்பது என்று தீவிரமாக ஆலோசித்து வருகிறாராம்.

ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகள் பிறப்பது என்பது 490 கோடி பிறப்புகளுக்கு ஒருமுறை நிகழ வாய்ப்புள்ளது என்பது கூடுதல் தகவல்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.