யுத்தத்தின் இழப்பை பூர்த்தி செய்வது கடினம்!

யுத்தத்தால் யாருக்கும் நன்மை கிடைக்காதென்பதோடு அதன் இழப்பை பூர்த்தி செய்வது மிகவும் கடினமென மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான கலாநிதி வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


எனவே, இந்தியாவும் பாகிஸ்தானும் புரிந்துனர்வுடன் நடந்து கொள்ள வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நுவரெலியா கொத்மலை லபுக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட தொழில்நுட்ப கட்டடத்தை இன்று (வெள்ளிக்கிழமை) திறந்து வைத்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “இந்தியாவும் பாகிஸ்தானும் புரிந்துனர்வுடன் நடந்துகொண்டு தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு சுமுகமான ஒரு தீர்வை பெற்றுக்கொள்ள வேண்டும்.

இந்திய விமானி அபிநந்தனை விடுதலை செய்வதற்கு பாகிஸ்தான் பிரதமர் எடுத்துள்ள தீர்மானமானது அவருடைய மனிதாபிமானத்தை எடுத்துக்காட்டுகிறது.

யுத்தத்தின் வடுவை நாங்கள் நன்கு அறிவோம். யுத்தத்தால் யாருக்கும் நன்மை கிடைக்காது. அதனால் பாதிக்கப்படுகின்றவர்கள் மக்களே. அதன் இழப்பை பூர்த்தி செய்வது மிகவும் கடினமாகும்” என மேலும் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.