தமிழர் நிலம் கண்ணீரில் நிரம்பியது..!!
2019தமிழர்களைச் சுடும் துரோகத் துப்பாக்கி ஈழ தேசத்தின் அழுகுரல் இன்னும் நிறுத்தப்படவில்லை
ஈழம் சிந்திய குருதியின் ஈரம் இதுவரை காய்ந்ததாய் இல்லை
வானென நிமிர்ந்த விடுதலைக் குரல்
ஈர் பத்தியொரு நாடுகளால் உடையுண்டது
துரோகமும் குரோதமும் தமிழீழக் குழந்தைகளை உருசி பார்த்துச் சுவைத்தன
மானுட ஆன்மாக்களின் கதறல் நந்திக் கடலில் பேராறானது
முல்லைத் தீவின் கொல்லைப் புறமெங்கும் கொத்துக் குண்டுகள் சன்னதங்கொள்ள
சனங்கள் விமானக் கழுகுகளால் பச்சையாகப் பொரித்துப் புதைக்கப் பட்டன
எஞ்சிய பால்குடி மாறா பால் மணம் நிறைந்த குழந்தைகள் இன்று வரை காணாமால் ஆக்கப்பட்டானர்
வீதிகள் தோறும் விடுதலைப் பிச்சை ஏந்திய தாய்க்குலத்தின் கதறல் பெரும் எழுச்சியாகி வெடிக்க
கறுத்தாடுகளின் கூட்டம் துரோகத் துப்பாக்கியால் 2019இல் சுடத் தொடங்கினர்
2009இல் நிறுத்தப்பட்ட கொலைத்தனத்தின் விசாரணையை சனங்கள் ஜெனீவாவின் காதுகளில் ஓங்கி உரைக்க அங்கும் சென்றது தமிழ் மக்களை மேயும் கறுத்தாடுகள்
கால அவகாசம் தேவை...!
கால அவகாசம் தேவை...!
கால அவகாசம் தேவை என தமிழ் மக்களை நோக்கி துரோகத் துப்பாக்கியால் சுட்டபடி..!
தமிழர் நிலம் கண்ணீரில் நிரம்பியது
த.செல்வா
ஈழம் சிந்திய குருதியின் ஈரம் இதுவரை காய்ந்ததாய் இல்லை
வானென நிமிர்ந்த விடுதலைக் குரல்
ஈர் பத்தியொரு நாடுகளால் உடையுண்டது
துரோகமும் குரோதமும் தமிழீழக் குழந்தைகளை உருசி பார்த்துச் சுவைத்தன
மானுட ஆன்மாக்களின் கதறல் நந்திக் கடலில் பேராறானது
முல்லைத் தீவின் கொல்லைப் புறமெங்கும் கொத்துக் குண்டுகள் சன்னதங்கொள்ள
சனங்கள் விமானக் கழுகுகளால் பச்சையாகப் பொரித்துப் புதைக்கப் பட்டன
எஞ்சிய பால்குடி மாறா பால் மணம் நிறைந்த குழந்தைகள் இன்று வரை காணாமால் ஆக்கப்பட்டானர்
வீதிகள் தோறும் விடுதலைப் பிச்சை ஏந்திய தாய்க்குலத்தின் கதறல் பெரும் எழுச்சியாகி வெடிக்க
கறுத்தாடுகளின் கூட்டம் துரோகத் துப்பாக்கியால் 2019இல் சுடத் தொடங்கினர்
2009இல் நிறுத்தப்பட்ட கொலைத்தனத்தின் விசாரணையை சனங்கள் ஜெனீவாவின் காதுகளில் ஓங்கி உரைக்க அங்கும் சென்றது தமிழ் மக்களை மேயும் கறுத்தாடுகள்
கால அவகாசம் தேவை...!
கால அவகாசம் தேவை...!
கால அவகாசம் தேவை என தமிழ் மக்களை நோக்கி துரோகத் துப்பாக்கியால் சுட்டபடி..!
தமிழர் நிலம் கண்ணீரில் நிரம்பியது
த.செல்வா
கருத்துகள் இல்லை