உலக கவிதை தினம்..!

மனித சிந்தை தனிலே
எண்ணாயிரம் தேடல் சுவை

பற்பல உணர்வுகளில்
கலந்த புதுமையொன்று

எண்ணக்கருவாக மாறி
சொற்களை வியர்ப்பில்

ஒன்றினைந்தே சேர்க்கும்
ஒவ்வொரு தருணங்களும்

இலக்கண இலக்கிய
அற்புதங்கள் ஆற்றல் பெற்று

சொல்லாக கோர்வையாகி
மிளிரும் போது

கவிதையெனும் பிரசவம்
உணர்வினில் பிறந்து

அகிலத்தை ஆர்ப்பரிப்பரிக்க
இயல்பில் இன்பமாகிறது கவிதை!!!

மூர்த்தி டீன்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.