ராபர்ட் வாத்ராவை கைது செய்ய மும்முரம்!!


ராபர்ட் வாத்ரா விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. இதனால், அவரை கைது செய்து காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை கோர்ட்டில் தெரிவித்தது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாக உ.பி., கிழக்கு காங்கிரஸ் பொது செயலர் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வாத்ராவை கைது செய்து, காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என டில்லி கோர்ட்டில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது.

இதனை தொடர்ந்து, வாத்ராவை கைது செய்வதற்கான தடையை டில்லி கோர்ட் மார்ச் 25 வரை நீட்டித்துள்ளது. பிரியங்காவின் கணவர் ராபர்ட் வாத்ரா, 50, ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில், பல கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு வீடுகளை வாங்கியதில், பணப் பரிமாற்ற மோசடியில் ஈடுபட்டதாக, அமலாக்கத் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில், வாத்ரா கைது செய்யப்படலாம் என்பதால், முன், 'ஜாமின்' கோரி, டில்லி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த கோர்ட், வாத்ராவை கைது செய்ய தடை விதித்ததுடன், அமலாக்கத்துறை விசாரணைக்கு தேவைப்படும் போது ஆஜராக வேண்டும் என வாத்ராவுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வக்கீல், ராபர்ட் வாத்ரா விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. இதனால், அவரை கைது செய்து காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும். பல்வேறு குற்றச்செயல் மூலம் வாங்கப்பட்ட ஏராளமான சொத்துகள் மூலம் வாத்ரா பெரிதும் பயன்பெற்றுள்ளார். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இது முக்கிய கட்டத்தில் உள்ளது எனக்கூறினார்.

தொடர்ந்து, வாத்ராவை கைது செய்வதற்கான தடையை மார்ச் 25 வரை நீட்டித்த கோர்ட், விசாரணைக்கு தேவைப்படும் போது வாத்ரா ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.