வலிகாமம் தெற்கு பிரதேச சபை வாயிலில் முற்றுகை போராட்டம்!!

புன்னாலை கட்டுவான் வடக்கு மக்கள் வலிகாமம் தெற்கு பிரதேச சபை வாயிலில் முற்றுகை போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.


தாம் இதுவரை ஈம கிரிகைகளை முன்னெடுத்த பிரதேசம் தம்மிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளமைக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது ஆர்பாட்டக்காரர்கள் தமக்கு மீண்டும் அந்த இடத்தை பெற்றுதருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

“அரசே கடமையை செய் அரசியல் செய்யாதே“, “பிரதேச சபையே எமது சுடலையை பாதுகார்“, “பிரதேச செயலரே சந்தைகளும் தெருக்கடைகள் மட்டும் உமதல்ல மயானங்களும் உமதே செய் அல்லது செத்துமடி“, “மயானத்தில் அரசியல் செய்யாதே எமது மயானம் எமது புனித பூமி பிள்ளையான் கட்டே எமது இறுதி மூச்சு“ உள்ளிட்ட வாசகங்கள் பொறிக்கப்பட்ட பாதாகைகளுடன் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.