ஜம்மு – காஷ்மீர் எல்லையில் மோதல்: இந்திய வீரர் உயிரிழப்பு!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் இராணுவத்துடன் இடம்பெற்ற மோதலில் இந்திய இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


ஜம்மு – காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்ட எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் இராணுவம் இன்று (வியாழக்கிழமை) அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டிலேயே குறித்த வீரர் உயிரிழந்துள்ளார்.

போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் வகையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் இராணுவம் தொடர்ந்தும் அத்துமீறித் தாக்குதலகளை நடத்தி வருவதாக இந்திய இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை கடந்த 2018-ம் ஆண்டில் பாகிஸ்தான் படைகள் 2936 முறை எல்லையோரத்தில் உள்ள இந்திய நிலைகளின்மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக இந்திய இராணுவம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.