155வது பொலிஸ் வீரர்கள் தினம் இலங்கையில் அனுஸ்டிப்பு!

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 155வது பொலிஸ் வீரர்கள் தினம் இன்று(வியாழக்கிழமை) நாடளாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.
கிழக்கு மாகாணத்தின் பிரதான நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் நடைபெற்றது.


மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களுக்கான பிரதிப்பொலிஸ் அதிபர் நுவான் வெதசிங்க தலைமையில் இந்த நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திலுள்ள பொலிஸ் வீரர்கள் நினைவுத்தூபியருகில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டங்களின் பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர்கள், மதத்தலைவர்கள், பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், உயிர்நீர்த்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் உறவினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது பொலிஸ் கொடியேற்றப்பட்டு பொலிஸ் அணிவகுப்பு மரியாதையினை தொடர்ந்து உயிர்நீர்த்தவர்களுக்கான மரியாதையொழி எழுப்பப்பட்டு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து நினைவுத்தூபியில் மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
அதேபோன்று, 155வது பொலிஸ் வீரர்கள் தினம் இன்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. யாழ் பொலிஸ் அத்தியட்சகர் தினேஷ் கருணாரட்ன தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
கடமையின் பொது உயிர்நீத்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இதன்போது அஞ்சலி செலுத்தப்பட்டது.
இலங்கை பொலிஸ் சேவையில் கடமையின் போது இதுவரை 3 ஆயிரத்து 124 உத்தியோகத்தர்களுக்கள் உயரிழந்துள்ளனர். அவர்களின் நினைவாக மலர் தூவி, பொலிஸ் மரியாதை செலுத்தப்பட்டது.
அதேபோன்று, வவுனியா பொலிஸ் நிலைய வளாகத்தில் வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுரா அபேயவிக்கிரம தலைமையில் இன்று காலை 8 மணியளவில் பொலிஸ் வீரர்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
வவுனியா பிராந்திய நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் வீரர்கள் நினைவுத்தூபியில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
சர்வ மதத் தலைவர்கள், உயிரிழந்த பொலிஸாரின் குடும்ப உறுப்பினர்கள், ஓய்வு பெற்ற பொலிஸார், வவுனியா பொலிஸ் அத்தியட்சகர் தென்னக்கோன், பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸார் எனப்பலரும் கலந்துகொண்டு உயிர் நீத்த பொலிசாருக்கு அஞ்சலி செலுத்தினர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.