தமிழகத்திலிருந்து 24 ஈழ அகதிகள் மீண்டும் நாடு திரும்பவுள்ளதாக அறிவிப்பு!

தமிழகத்திலிருந்து 24 ஈழ அகதிகள் மீண்டும் நாடு திரும்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய கொள்கைகள், பொருளாதார விவகார, மறுசீரமைப்பு மற்றும் மீள்குடியேற்றத்துறை வடக்கு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் வீ.சிவஞானசோதி இதனைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘நாளையும் எதிர்வரும் 28ஆம் திகதியும் இவர்கள் நாடு திரும்பவுள்ளனர்.
ஐக்கிய நாடுகளின் அகதிகள் உயர்ஸ்தானிகரகத்தின் உதவியுடன் இவர்கள் மீண்டும் நாடு திரும்பவுள்ளனர்.
விசேட விமான சேவைகளின் ஊடாக குறித்த இரண்டு தினங்களிலும், 24 குடும்பங்களைச் சேர்ந்த 54 பேர் நாடு திரும்பவுள்ளனர்.
இவ்வாறு நாடு திரும்புகின்றவர்கள் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆகும்.
அவர்களை அவர்களது மாவட்டங்களிலேயே மீள்குடியேற்றுவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன’ என தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.