கலப்பு நீதிமன்றைக் கோரினால் கறுப்பு ஜீலை மீண்டும் வரும்!!

தமிழர்களுக்கு எதிரான யுத்தக் குற்றங்களை விசாரிப்பதற்கு கலப்பு நீதிமன்றப் பொறிமுறையைக் கோரினால் அது மீண்டும் கறுப்பு ஜீலைக்கு வழிவகுக்கும் என சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தமிழ் மக்களுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

பதுளை -ஹாலி-எலயில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்துரைக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சிறிலங்காவில் யுத்தக்குற்றம் இடம்பெற்றதாகத் தெரிவித்து வழக்குத் தாக்கல் செய்யப் போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறியிருப்பதாகச் சுட்டிக்காட்டிய டிலான் பெரேரா, தான் ஓர் சிறிலங்கன் என்பதை சுமந்திரன் மறந்துவிடக்கூடாது எனவும் தெரிவித்தார்.

சிறிலங்காவில் நீதிப்பொறிமுறை ஒன்று உள்ளதால் அரசமைப்புக்கு அமைவாக கலப்பு நீதிமன்றத்தை உருவாக்க முடியாது. ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவர் அரசமைப்புப் பற்றி நன்கு அறிந்திருப்பார்.

நீதித்துறையில் பேராசிரியராக இருக்கும் முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் எழுதிய நூல்களைக் கற்றே, சுமந்திரன் பரீட்சையில் சித்தியடைந்தார். எமது நாட்டுச் சட்டங்களுக்கு அமைவாக கலப்பு நீதிமன்றத்தை அமைக்க முடியாதென வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன கூறியுள்ளார்.

இவ்வாறான நிலையில், மீண்டும் கலப்பு நீதிமன்றக் கோரிக்கையை முன்வைப்பது, இந்நாட்டுத் தமிழ் மக்களைப் பலியிடுவதாகவே அமையும். அதனால் மீண்டுமொரு கறுப்பு ஜூலைக்கு வழிசமைக்க வேண்டாம் என சுமந்திரன் எம்.பியிடம் கேட்டுக்கொள்கின்றேன். – என டிலான் பெரேரா மேலும் தெரிவித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.