பலவருடங்களாக திருத்தப்படாத குமுழமுனை செங்காட்டுகேணி வீதி புனரமைப்பு.!!
கரைதுறைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட குமுழமுனை செங்காட்டுகேணி வீதி பல வருடங்களாக திருத்தப்படாமல் சேதமடைந்த நிலையில் காணப்பட்டுள்ளது.
இதனையடுத்து பிரதேச சபை உறுப்பினரின் முயற்சியால் குறித்த வீதி திருத்தப்பட்டு மக்கள் பாவனைக்காக இன்று கையளிக்கப்பட்டுள்ளது.
குமுழமுனை வட்டார பிரதேச சபை உறுப்பினர் இ. கவாஸ்கரின் முயற்சியினால் சபைக்கு கொண்டுவரப்பட்ட பிரேரணைகளின் அடிப்படையில் குறித்த வீதியானது பிரதேச சபையின் நிதி ஒதுக்கீட்டில் 850மீற்றர் தற்போது புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக விடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்களின் நீண்டகாலத் தேவை நிறைவேற்றப்பட்டுள்ளது.
மிகுதி 800 மீற்றர் வீதியானது ஜப்பான் நாட்டினுடைய நிதிப் பங்களிப்பில் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo“
கருத்துகள் இல்லை