மட்டக்களப்பு நூலகங்களுக்கு புத்தகங்கள் அன்பளிப்பு!!

ஆசிய மன்றத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து நூலகங்களுக்கும் புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.



மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்றங்களினால் நிர்வகிக்கப்படும் 84 நூலகங்களுக்கான புத்தகங்கள் பகிர்ந்தளிக்கும் நிகழ்வு இன்று (புதன்கிழமை) மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ். பிரகாஷ் தலைமையில் மட்டக்களப்பு பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் கே. சித்திரவேல், ஆசிய மன்றத்தின் புத்தக நிகழ்ச்சி திட்ட பணிப்பாளர் அன்டன் நல்லதம்பி, மட்டக்களப்பு நகரசபை மற்றும் பிரதேச சபைகளின் தவிசாளர்கள், பிரேதச சபை செயலாளர்கள், நூலகர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பின்தங்கியுள்ள கல்வித் தரத்தையும், வாசிப்பு பழக்கத்தையும் ஊக்குவிப்பதன் மூலம் சிந்திக்கும் ஆக்கபூர்வ ஆற்றலுள்ள பிரஜைகளை உருவாக்க முடியும் என்ற நோக்குடன் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக ஆசிய மன்றத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்

சுமார் 8.8 மில்லியன் ரூபாய் பெறுமதியான 4,860 புத்தகங்கள் நூலகங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.