கிளிநொச்சி சிவநகரில் வீடமைப்புக்கு அடிக்கல்!


கிளிநொச்சி சிவநகரில் மாதிரிக் கிராமத்துக்கான வீடமைப்புத் திட்ட வேலைகள் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.


தேசிய வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசாரத்துறை அமைச்சர் சஜித்பிரேமதாசவால் முன்னெடுக்கப்படும் ‘கிராமத்திற்குக் கிராமம் வீட்டுக்கு- வீடு’ என்னும் வீடமைப்புத் திட்டத்தினூடாக, நாடபாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின கோரிக்கைக்கமைவாக கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள மாதிரிக்கிராம வேலைத்திட்டத்தின் மூலம், கிளிநொச்சி சிவநகர் கிராமத்தில் அமையப் பெறவுள்ள 28 வீடுகளை உள்ளடக்கிய மாதிரிக் கிராமத்துக்காக வீடமைப்புப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
கரைச்சிப் பிரதேச சபை உறுப்பினர் க.கணேசலிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கிளிநொச்சி மாவட்ட திட்ட முகாமையாளர் த.சுபாஸ்கரன், கிராம அலுவலர் சு.சாரதாம்பாள், சமுர்த்தி உத்தியோகத்தர், தொழிநுட்ப உத்தியோகத்தர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் சுஜீவன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருத்திரபுரம் பிரதேச அமைப்பாளர் பா.எழில்வேந்தன், பொது அமைப்புக்களைச் சேர்ந்தோர், வீட்டுத் திட்டப் பயனாளிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.