தலைமன்னார் கடற்பகுதியில் மூவர் கைது!!


தலைமன்னார் கடற்பகுதியில் வைத்து இன்று அதிகாலை 41 சாக்குகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1547.68 கிலோ கிராம் பீடி இலைகளுடன் 3 பேர் இன்று (22) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் இந்தியாவில் இருந்து டிங்கி படகு மூலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட நபர்கள் 28, 30 மற்றும் 35 வயதுடையவர்கள் எனவும் இவர்கள் தலைமன்னார் ஊறுமலை பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டவர்கள் எனவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இன்னிலையில் கடந்த சில நாட்களாக தலைமன்னர் கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது 2787.3 கிலோ எடையுடைய பீடி இலைகள் கடற்படையினரால் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.