எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் ஒருவரை களமிறக்க தயார்!!

அனைத்து தரப்பினர்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வேட்பாளர் ஒருவரை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக ஐக்கிய தேசிய கட்சி களமிறக்குவதாக பாராளுமன்ற உறுப்பினர் மனூஷ நானாயக்கார தெரிவித்துள்ளார்.


காலி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாடே ஏற்றுக் கொள்ளும், நாடே அன்பு செலுத்தும் அனைத்து தரப்பினர்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வேட்பாளர் ஒருவரை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக ஐக்கிய தேசிய கட்சி களமிறக்குவதாக தெரிவித்த அவர், அந்த விடயம் தொடர்பில் இப்போதே கருத்து தெரிவிப்பது தகுந்ததல்ல எனவும் தெரிவித்துள்ளார்.
மரியாதைக்குரிய கட்சி என்ற ரீதியில் அனைவரது ஆசியுடனும் குறித்த விடயத்தை வெளியிடுவதாகவும், அதற்காக அனைவரது ஒத்துழைப்பும் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.