பங்களாதேஷ் தீ விபத்தில் இலங்கையர் உட்பட 7 பேர் பலி85பேர் காயம்!!

பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் உள்ள அடுக்குமாடிக் கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் இலங்கையர் உட்பட ஏழு பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

டாக்காவில் பனானி பகுதியில் அமைந்துள்ள 22 மாடிகள் கொண்டு அடுக்குமாடி குடியிருப்புபொன்றிலேயே இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது.
இதையடுத்து தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்த தீ விபத்தில் இருந்து தப்பிக்க முயன்ற சிலர் மாடிகளில் இருந்து கீழே குதித்துள்ளனர். இதனால் படுகாயம் அடைந்த 5 பேர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 80 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இவ்வாறு காயமடைந்த பலரை படையினர் பாதுகாப்பாக மீட்பு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.