நகுலேஸ்வரம் புனித பூமியை கையகப்படுத்த நடவடிக்கை !

நகுலேஸ்வரம் புனித பூமியை கையகப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.


நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற இந்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “யாழ்ப்பாணம் – நகுலேஸ்வரம் புனித பூமியை கையகப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த 22ஆம் திகதி நகுலேஸ்வரத்தில் காணிகளை அளவீடு செய்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. எனினும் 21ஆம் திகதி பிரதமருடன் பேசி அதனை நிறுத்தினோம்.
இதற்கு முன்னரும் பல முறை நாம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இதுகுறித்து பேசியுள்ளோம்.
வடக்கில் இனியும் பொதுமக்களின் காணிகள் சுவீகரிக்கப்படுகின்றதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கெதிரான நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுப்போம்” என தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.