புத்தளத்தில் மைத்திரி விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்ட ஏற்ப்பாடு!!!!

ஜனாதிபதியின் விஜயத்திற்கு எதிர்ப்பை வெளியிடுவதற்கு புத்தளம் மக்கள் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மக்கள் பாவனைக்காக திறந்து வைப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாளை (வெள்ளிக்கிழமை) புத்தளத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.

குறித்த விஜயத்தின்போது புத்தளம் தபால் நிலையத்திற்கு முன்பாக புத்தளத்தில் வாழும் மூவின மக்களும் கறுப்பு கொடிகளுடன் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு குப்பைகளை புத்தளத்தில் கொட்டும் விவகாரம் தொடர்பாக ஜனாதிபதியை நேரில் சந்திப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாததை கண்டித்தே இந்த எதிர்ப்பு வெளியிடப்படவுள்ளது.
ஜனாதிபதியின் புத்தளம் விஜயத்தின்போது இளைஞர், யுவதிகள் மூலம் தொழில்வாய்ப்புக்களை பதிவுசெய்யும் ஸ்மார்ட் ஸ்ரீலங்கா எனும் விஷேட வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
அத்துடன், புத்தளம் கொழும்பு முகத்திடலுக்கு முன்பாக நவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள கேட்போர் கூடம் மற்றும் புத்தளம் பஸ் நிலையத்திற்கு முன்னால் சகல வசதிகளுடன் புதிதாக அமைக்கப்பட்ட விளையாட்டு மைதானம் என்பனவற்றையும் ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.