ரணில் விக்ரமசிங்க காலவகாசம் வேன்டிய வேண்டுதலுக்கு திருப்பதி பயணமாம்!!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவுக்குப் பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


அதன்படி அவர் இன்று (சனிக்கிழமை) பிற்பகல் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபடுவதற்காகவே, அவர் இரண்டு நாட்கள் பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
சென்னைக்கு விஜயம் செய்யவுள்ள பிரதமர், அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம், மாலை 4.30 மணியளவில் திருப்பதியைச் சென்றடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அங்கிருந்து, தரைவழியாக திருமலைக்குச் செல்லும் அவர், சிறி பத்மாவதி விடுதியில் இரவு தங்கியிருப்பாரென்றும் அதன் பின்னர், நாளை அதிகாலை ஏழுமலையான் ஆலயத்தில் வழிபாடுகளை முடித்துக்கொண்டு, நாடு திரும்பவுள்ளதாக கூறப்படுகின்றது.
பிரதமரின் வருகையை முன்னிட்டு திருமலையில் சிறப்பு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.