தென்னைமரவாடி குச்சவெளியில் இரண்டு தமிழ் கிராமங்களில் அத்துமீறிய சிங்கள குடியேற்றம்!

திருகோணமலையின் தென்னைமரவாடியில் இருந்து புல்மோட்டை செல்லும் வீதியில் குச்சவெளி பிரதேச செயலக பிரிவில் இரண்டு தமிழ் கிராமங்களில்  மாலனூர் (12 ஆம் கட்டை ) மற்றும் ஏறமாடு(10 ஆம் கட்டை ) சிங்கள குடியேற்ற திட்டங்கள் உருவாக்க பட்டு இருக்கிறது .
ஏற்கனவே சிங்கள குடியேற்ற வாசிகள் தற்காலிக குடியேற்றங்களை உருவாக்கி குடியேறி உள்ள நிலையில்  பௌத்த பிக்குகளின் ஆதரவில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பாதுகாப்புடன் வீடமைப்பு அதிகார சபையால் நிரந்தர வீடமைப்பு திட்டம் உருவாக்க பட்டு வருகிறது .இந்த வீடமைப்பு திட்டத்திற்கு குச்சவெளி பிரதேச செயலகத்தின் எந்த வித அனுமதியும் பெறப்படவில்லை .காணி பயன்பாட்டு ஆணைக்குழுவின் அனுமதியும் இதற்க்கு பெறப்படவில்லை . இவ் குடியேற்ற திட்டம் ஒன்றுக்கு சாந்தபுர என பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.