மிஸ் யூ தோனி' ட்விட்டரில் நெகிழ்ந்த விக்னேஷ் சிவன்!

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான  4 -வது ஒருநாள் போட்டியில், இந்தியா தோல்வியடைந்தது.
5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட  இந்தத் தொடரில், 2-2 என்ற சமநிலையில் இரு அணிகளும் உள்ளன. நேற்றைய போட்டியில், முதலில் பேட் செய்த இந்திய அணி  சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 358 ரன்களைக் குவித்தது.  பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி, இறுதி நேரத்தில் டர்னரின் வெறித்தனமான பேட்டிங் காரணமாக 359 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

நேற்றைய ஆட்டத்தில், இந்திய அணியில்  சில மாற்றங்கள் நிகழ்ந்திருந்தன. அதில் முக்கியமான ஒரு மாற்றமாக, தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. இதனால், நேற்றைய ஆட்டத்தில் தோனிக்குப் பதிலாக ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராகச் செயல்பட்டார். நேற்றைய ஆட்டத்தில், இந்திய அணி தோல்வியடைந்தது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன், நேற்றைய ஆட்டம்குறித்து தனது  ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார். அதில் அவர், தோனியின் புகைப்படத்தைப் பதிவிட்டு, "தலைவன் இருந்திருந்தால்!"   நாங்கள் ஏற்கெனவே உங்களை மிஸ் செய்கிறோம் தோனி  என ட்வீட் செய்திருந்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.