பிரதமர் ரணில் மட்டக்களப்புக்கு விஜயம்!!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மட்டக்களப்புக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.


காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் காணி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்காகவே அவர், நாளை (சனிக்கிழமை) இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நாளை காலை 9.00 மணிக்கு இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இதன்போது 7206 பேருக்கு காணி உறுதிப்பத்திரங்கள், காணி அனுமதிப்பத்திரங்களையும் வழங்கிவைப்பதற்கான ஏற்பாடுகளை மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மேற்கொண்டுள்ளது.

மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மாணிக்கம் உதயகுமார் தலைமையில் நடைபெறவுள்ள இவ்வைபவத்தில் மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர்களையும் சேர்ந்த மக்கள் உறுதிப்பத்திரங்களைப் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.

மாவட்டத்தில் உள்ள நிரந்தரக் காணியற்ற மக்களுக்கு காணி வழங்கும் வகையில் 6109 காணி அனுமதிப்பத்திரங்களும், 1097 காணி உறுதிப்பத்திரங்களும் வழங்கப்படவுள்ளதாக மாவட்ட செயலாளர் மா. உதயகுமார் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் காணி அமைச்சர் கயந்த கருணாதிலக, இராஜாங்க அமைச்சர்களான அலிசாஹீர் மௌலானா, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், சி.யோகேஸ்வரன் உள்ளிட்டோரும் கலந்துகொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.