பஸ் சேவையின்மையால் மஸ்கெலியா நகரில் மக்கள் பெரும் அசௌகரியம்!!

மஸ்கெலியா நகரில் இருந்து ஹட்டன் நகருக்கு மாலை 5.50 மணிக்கு பின்னர் அரச பஸ் சேவை மற்றும் தனியார் பஸ் சேவை இல்லாமையால் மக்கள் பெரும் அசௌகரியத்திற்கு முகம் கொடுத்து வருவதாக புகார் தெரிவிக்கின்றனர்.


இப் பஸ் சேவையில்லாமையால் அரச பணியாளர்கள்,தனியார் வகுப்பிற்கு செல்லும் மாணவர்கள் மற்றும் வர்த்தக நிலையங்களில் பணிப்புரியும் பணியாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதுடன் இக்காலப்பகுதியில் சிவனடிபாதமலை பருவக்காலம் ஆரம்பித்துள்ளமையால் அங்கு வருகைத்தரும் யாத்திரிகளும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

ஆகவே உடன் இதற்கான தீர்வை ஹட்டன் அரச பஸ் நிலையமோ அல்லது தனியார் பஸ் சங்கத்தினரோ வழங்க முன்வரவேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றனர் பாதிக்கப்பட்ட மக்கள்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.