பெரு பேருந்தில் தீ பரவல்: 20 பயணிகள் உயிரிழப்பு!!

பெருவில் இரட்டை அடுக்கு பேருந்தொன்றில் தீ பரவியதில் அதில் சிக்கி சுமார் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.


தலைநகர் லிமாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற அனர்த்தத்தில் எட்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

பேருந்தின் இயந்திர பகுதியில் ஏற்பட்ட தீ பேருந்தின் அனைத்து பகுதிகளுக்கும் பரவியுள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பேருந்தின் மேல் தளத்தில் பயணித்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விபத்து நேர்ந்த சந்தர்ப்பத்தில் பேருந்தில் எத்தனை பேர் பயணித்திருந்தார்கள் என்பது உறுதிசெய்யப்படவில்லை.

இந்நிலையில், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.