நெடுஞ்சாலைகளில் புதிய வசதிகள் அறிமுகம்!!

நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் சாரதிகளுக்கு வசதிகளை செய்து கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அதிகளவானவர்கள் தமது சொந்த இடங்களுக்கு செல்வர்.

இதன்போது அதிவேக நெடுஞ்சாலைகளில் வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிவேக நெடுஞ்சாலை நடவடிக்கை மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ். ஓப்பநாயக்க தெரிவித்தார்.

பணியாளர்களின் விடுமுறைகளும் வரையறுக்கப்பட்டுள்ளன. வெளியேறும் கருமபீடங்களை அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒரு நிமிடத்தில் 8 வாகனங்கள் வெளியேறக்கூடிய வகையில் தொழில்நுட்ப பற்றுச்சீட்டுக்களை விநியோகிப்பதற்கான இயந்திரமும் பயன்படுத்தப்படுகிறது.

இதற்கமைவாக ஒரு மணித்தியாலத்தில் 350 வாகனங்கள் வெளியேற முடியும். பொதுவான தினங்களில் அதிவேக நெடுஞ்சாலையில் மாத்திரம் சுமார் 5 ஆயிரம் வாகனங்கள் செல்கின்றன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.