கத்தோலிக்க பாடங்களுக்கு ஆசிரியர் உதவியாளர்களை நியமிக்க நடவடிக்கை – ஹிஸ்புல்லா!!

கத்தோலிக்க சமயம், கிறிஸ்தவ சமயம் மற்றும் கிறிஸ்தவ நாகரீகம் போன்ற பாடங்களுக்கு பட்டதாரி பயிலுனர் மற்றும் ஆசிரியர் உதவியாளர்களை நியமிப்பதற்கு உடனடியாக விண்ணப்பம் கோருமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா கல்வி அமைச்சுக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவுக்கும் திருகோணமலை ஆயர் கலாநிதி அருட்தந்தை நொய்ல் இமானுவேலுக்குமிடையில் இன்று (புதன்கிழமை) திருகோணமலையில் உள்ள ஆயர் இல்லத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
திருகோணமலை ஆயரின் அழைப்பின் பேரில் திருமலை ஆயர் இல்லத்திற்கு விஜயம் மேற்கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவிற்கு மகத்தான வரவேற்பு வழங்கப்பட்டது.
இதன்போது கத்தோலிக்க சமயம், கிறிஸ்தவ சமயம் மற்றும் கிறிஸ்தவ நாகரீகம் போன்ற பாடங்களுக்கு பட்டதாரி பயிலுனர் மற்றும் ஆசிரியர் உதவியாளர்களை நியமிப்பதற்கு விண்ணப்பங்கள் கோரப்படவில்லை என திருகோணமலை ஆயர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து உடனடியாக விண்ணப்பங்களை கோருமாறு கல்வி அமைச்சுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அத்துடன் கிழக்கு மாகாணத்தில் காணப்படும் கிறிஸ்தவ சமூகத்தின் சார்பான பல விடயங்கள் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் திருகோணமலை ஆயரினால் முன்வைக்கப்பட்டன.
இதனையடுத்து உரிய அதிகாரிகளுக்கு உடனடியாக தொடர்புகொண்ட ஆளுநர், இந்த விடயம் குறித்து கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.