கஞ்சா கடத்தல் முறியடிப்பு!

மட்டக்களப்பு பொலிஸ் தலைமை பிரிவுக்குட்பட்ட பிள்ளையாரடிப்பகுதியில் சொகுசு காரில் கேரளா கஞ்சா கடத்தியவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


நேற்று (புதன்கிழமை) மாலை கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்து பெருமளவு கஞ்சாவும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதியின் போதையொழிப்பு வாரத்தினை முன்னிட்டு இடம்பெற்ற விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையிலேயே இந்த போதைப்பொருள் கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது.

இதன்போது குருணாகல் பகுதியை சேர்ந்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து சுமார் 2 கிலோ கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. அத்தோடு கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு காரும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.