ஆப்கானில் 25 பயங்கரவாதிகள் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தானில் இராணுவத்துக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையில் நடந்த மோதலில் 25 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ஆப்கான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதன்போது, இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் வடக்கு பகுதியில் உள்ள படாக்‌ஷா மாகாணத்தில் 12 பயங்கரவாதிகளும், கிழக்கு பகுதியில் உள்ள குனார் மாகாணத்தில் 13 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டு வடக்கு பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் சமீபகாலமாக மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது.

அவ்வகையில், வடக்கு மற்றும் வட. கிழக்கு ஆப்கானிஸ்தானுக்கு உட்பட்ட பல பகுதிகளில் கடந்த ஓராண்டு காலமாக நடைபெற்ற தேடுதல் வேட்டை மற்றும் மோதல்களில் இருதரப்பிலும் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, பயங்கரவாதிகள் மீது இரக்கம் காட்டாமல் நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டின் இராணுவம் மற்றும் பொலிஸாருக்கு அதிபர் அஷ்ரப் கானி உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.