எதிர்வரும் 15ஆம் திகதி வரையில் கடும் வெப்பம் !!

சூரியனின் வட. திசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக எதிர்வரும் 15ஆம் திகதிவரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாக நன்பகல் வேளைகளில் சூரியன் உச்சம் கொடுக்குமென அத்திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளது.
குறிப்பாக ஹங்கல்ல, கனேகொட, களுபோவிட்டியான, கெட்டவல, வளல்கொட, சூரியவெவ மற்றும் கல்கடுவ ஆகிய பிரதேசங்களுக்கு இன்று நண்பகல் 12.12 மணியளவில் சூரியன் உச்சம் கொடுக்குமென தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக மக்களை அவதானத்துடன் செயற்படும்படியும் அதிகமான நீர் அருந்தும்படியும் அத்திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதேவேளை நாட்டின் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
குறிப்பாக சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அத்தோடு அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படுமென எதிர்வுகூறியுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.