விழிநீரால் நிறைந்தது வட்டுவாகல் வீதி!!
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில் இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டோர், முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திலிருந்து, வட்டுவாகல் பாலத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர்.
இதன்போது ‘வட்டுவாகலில் கையளித்த எமது உறவுகள் எங்கே?’, இராணுவத்தினரின் கையில் கொடுத்த என் அப்பா எங்கே?’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை கைகளில் ஏந்தியவாறு காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் பேரணியாகச் சென்றனர்.
இந்த பேரணியில் பெற்றோர்கள் இளைஞர்கள் குழந்தைகளென உறவுகளைத் தொலைத்த பலரும் கலந்துகொண்டனர்.
கோசங்களை எழுப்பியவாறு வட்டுவாகல் பாலம் வரையில் சென்ற காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், அங்கு மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர். இதன்போது சொந்தங்களை கையளித்த இடத்தை காணாமலாக்கப்பட்டோரின் ஒறவுகள் கண்ணீரால் நனைத்தனர்.
இலங்கைக்கு கால அவகாசம் வழங்கி, இலங்கையுடன் சேர்ந்து சர்வதேசமும் தம்மை ஏமாற்றியுள்ளதாக காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் கூட்டமைப்பும் அரசிற்கு விலைபோயுள்ளதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் தம்மை ஏமாற்றிய அரசாங்கம், சர்வதேசம், கூட்டமைப்பு என அனைத்து தரப்பினருக்கும் எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்திருந்தனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை