வரலாற்று சிறப்புமிக்க சட்டமாற்றம் தென்கொரியாவில் !

தென்கொரியாவில் கடந்த 66 வருடகாலமாக நடைமுறையிலிருந்த கருக்கலைப்பு தடைச்சட்டம் அரசியலமைப்பிற்கு முரணானதென அந்நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.


2020ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்த சட்டம் திருத்தியமைக்கப்பட வேண்டுமென நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1953ஆம் ஆண்டுமுதல் நடைமுறையில் காணப்படும் சட்டத்தின் பிரகாரம், தடையை மீறி கருக்கலைப்பு செய்துகொள்ளும் பெண்களுக்கு ஓராண்டு சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம். கருக்கலைப்புச் சிகிச்சையைச் செய்யும் மருத்துவர்களுக்கு இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் பட்சத்தில் மாத்திரமே கருக்கலைப்பு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இதேவேளை, கருக்கலைப்பைத் தடை செய்யும் சட்டம் பெண்களுக்கு ஆபத்தை விளைவிக்குமென சமூக செயற்பாட்டாளர்கள் குறிப்பிட்டு வந்தனர். இந்த நடைமுறையை ரத்துசெய்ய வேண்டுமென நீண்டகாலமாக சர்ச்சை நீடித்தது.

இந்நிலையில், அந்நாட்டின் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாக அந்த சட்டத்தை மாற்றியெழுத நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.