மே 18இல் அவுஸ்ரேலிய தேர்தல்!!

அவுஸ்ரேலியாவில் எதிர்வரும் மே மாதம் 18ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.


நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான அனுமதியைப் பெற இன்று (வியாழக்கிழமை) ஆளுநரை சந்தித்த பிரதமர் ஸ்கொட் மொரிசன், அதன் பின்னர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

தமது கொன்சர்வேற்றிவ் கட்சி அரசாங்கம் மூன்றாவது தடவையாகவும் ஆட்சியை கைப்பற்றுமா அல்லது பில் ஷோர்டனின் தொழிலாளர் கட்சி ஆட்சியை கைப்பற்றுமா என்பதை இந்த தேர்தல் தீர்மானிக்குமென பிரதமர் கூறியுள்ளார்.

உலகின் சிறந்த நாடாக அவுஸ்ரேலியா காணப்பட்டாலும், எதிர்காலத்தை பற்றி சிந்தித்து பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்துவது அவசியம் என பிரதமர் மேலும் தெரிவித்தார். ஆட்சியை கைப்பற்றி எதிர்வரும் மூன்று வருடங்களுக்கு நாட்டை ஆள்வதை பற்றி சிந்திக்கவில்லை என்றும், தசாப்தங்கள் முன்னோக்கி சிந்திப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

151 ஆசனங்கள் கொண்ட அவுஸ்ரேலிய நாடாளுமன்றத்தில், 76 ஆசனங்களை செனட் சபை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.