கடுமையான ஷரியா சட்டத்தை நியாயப்படுத்துகிறது புரூணே!

ஓரினச்சேர்க்கையாளர்களை கல்லெறிந்துகொல்லும் புரூணேயின் ஷரியா சட்டத்தை உலக நாடுகளும் மனித உரிமை அமைப்புகளும் கடுமையாக சாடி வருகின்றன.
எனினும், தண்டனையைவிட குற்றம் இடம்பெறாமல் தடுப்பதே இச்சட்டத்தின் நோக்கமென புரூணே குறிப்பிட்டுள்ளது.

ஓரினச் சேர்க்கையாளர்களை கல்லெறிந்து கொலைசெய்யும் இஸ்லாமிய ஷரியா சட்டத்தை, புரூணே கடந்த 3ஆம் திகதி அமுல்படுத்தியது.

இதற்கு மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளன. குறிப்பாக, இச்சட்டம் கொடூரமான மற்றும் மனிதத் தன்மையற்றதென ஐ.நா. குறிப்பிட்டுள்ளது. அதற்கு பதிலளிக்கும் வகையில் ஐ.நா.வுக்கான புரூணேயின் வெளிவிவகார அமைச்சர் எரிவன் யூசுப் அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஷரியா சட்டமானது தண்டனை வழங்குவதைவிட, கல்வியை வளர்க்க, குற்றம் நடைபெறாமல் தடுக்க மற்றும் மறுவாழ்வளிக்கவே உதவுகின்றதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஓர்பாலின உறவுகள் உட்பட பாலியல் நாட்டம் அல்லது நம்பிக்கையை ஷரியா குற்றமாக கருதவில்லை. ஆனால், விபச்சாரத்தை தடுக்க, குடும்ப உறவுகளை பாதுகாக்க, குறிப்பாக பெண்களின் திருமண வாழ்க்கையை பாதுகாக்கும் வகையிலேயே உள்ளதென அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.