ராகுல் காந்தி மீது பா.ஜ.க.முறைப்பாடு!!

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக, உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தேர்தல் ஆணையகத்தில் பா.ஜ.க முறைப்பாடு பதிவு செய்துள்ளது.


மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோர் அடங்கிய பா.ஜ.க குழுவொன்று தேர்தல் ஆணைய அதிகாரிகளை இன்று (சனிக்கிழமை) சந்திந்துள்ளனர். பின்னர் ராகுலுக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இவ்விடயம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நிர்மலா சீதாராமன், “பிரதமர் மோடியை ‘திருடன்’ எனக்கூறி  பொய்யான குற்றச்சாட்டுகளை ராகுல் காந்தி தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால் அதற்கான ஆதாரங்கள் ஏதும் அவரிடம் இல்லை.

மேலும் உச்ச நீதிமன்றமும்  மோடி மீது எந்ததொரு குற்றச்சாட்டையும்  உறுதிப்படுத்தாத நிலையில், பிரதமருக்கு எதிராக பொய்யான பிரசாரத்தை ராகுல் முன்னெடுத்துள்ளார்.

இந்த செயற்பாடு தேர்தல் நடத்தை விதிமீறலாகும் என்பதுடன் மக்களிடத்தில் வாக்குகளை சேகரிப்பதற்காக  பிரதமர் மீது அவதூறான குற்றச்சாட்டுகளை வேண்டும் என்றே ராகுல் தெரிவித்து வருகிறார்.

ஆகையால் தேர்தல் விதிகளை மீறும் ராகுலின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக  நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னரும் ராகுலுக்கு எதிராக பா.ஜ.க அளித்த முறைப்பாடுகள் மீது தேர்தல் ஆணையகம் நடவடிக்கை மேற்கொள்ளாத நிலையில் மீண்டும் அக்கட்சி முறைபாடு பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.