கோலி தலைமையிலான பெங்களுர் அணிக்கு முதல் வெற்றி!!

https://www.tamilarul.net/கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கோலி மற்றும் வில்லியர்ஸ் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தின் உதவியுடன் பெங்களுர் ரோயல் சலஞ்சர்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இந்த ஐ.பி.எல். தொடரில் முதலாலது வெற்றியைப் பதிவுசெய்தது.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 28 ஆவது லீக் போட்டி மொஹாலியில்  உள்ள பஞ்சாப் கிரிக்கெட் மைதானத்தில் நேற்றிரவு 8 மணிக்கு தொடங்கியது. 
https://www.tamilarul.net/
இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு அணி  தலைவர் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். 
https://www.tamilarul.net/
இதையடுத்து, பஞ்சாப் அணியின் லோகேஷ் ராகுலும், கிறிஸ் கெயிலும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். 
முதலில் இருந்தே இருவரும் அடித்து ஆடினர். இதனால் ஒரு ஓவருக்கு 10 ஓட்டங்கள் சராசரியாக கிடைத்தது.
https://www.tamilarul.net/
அணியின் எண்ணிக்கை 66 ஆக இருந்தபோது லோகேஷ் ராகுல் 16 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய மயங்க் அகர்வால், சர்ப்ராஸ் கான் ஆகியோர் 15 ஓட்டங்களுடனும் சாம் குர்ரன் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுபுறம் பொறுப்புடன் ஆடிய கெயில் அரை சதமடித்து அசத்தினார்.
https://www.tamilarul.net/
இறுதியில், பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்புக்கு 173 ஓட்டங்களை எடுத்துள்ளது. கெயில் அபாரமாக ஆடி 64 பந்துகளில்  5 சிக்சர், 10 பவுண்டரியுடன்  99 ஓட்டங்களைப்பெற்று ஆட்டமிழக்காதிருந்தார். இதையடுத்து பெங்களூரு அணி வெற்றிபெற 174 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
பெங்களூரு அணி சார்பில் சஹல் 2விக்கெட்டும், மொகமது சிராஜ், மொயின் அலி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 
https://www.tamilarul.net/
இதனையடுத்து 174 ஓட்டங்கள்  எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களம் இறங்கியது.  
தொடக்க ஆட்டக்காரர்களாக பார்த்தீவ் பட்டேல், விராட் கோலி களம் இறங்கினர்.  இருவரும் நிதானமாக ஆடிய நிலையில் ஆட்டத்தின் 3.5 ஓவரில் அஸ்வின் பந்து வீச்சில் அகர்வாலிடம் பிடிகொடுத்து பட்டேல் 19 (9) ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். 
https://www.tamilarul.net/ 
அடுத்ததாக டிவில்லியர்ஸ் களம் இறங்கினார்.  விராட் கோலியும், டிவில்லியர்ஸ் ஜோடியும் இணைந்து தனது அணியின் ஓட்டங்களை உயர்த்த தொடங்கினர்.  இந்த ஜோடியை பிரிக்க பஞ்சாப் அணி பந்துவீச்சாளர்கள்  பெரும் முயற்சி எடுத்தனர்.  ஆனால் அவர்கள் முயற்சி தோல்வியில் முடிந்தது.   
https://www.tamilarul.net/
ஆனால் ஆட்டத்தின் 15.3 ஓவரில் மொஹமட் சமி வீசிய பந்தில் அஸ்வினிடம் பிடிகொடுத்து அணியின் தலைவர் விராட் கோலி 53 பந்துகளை சந்தித்து 67 ஓட்டங்களைப்பெற்று ஆட்டம் இழந்தார்.  இதன் மூலம் பெங்களுர் அணி 15.3 ஓவர் முடிவில் 2 விக்கெட்களை இழந்து 128 ஓட்டங்களை எடுத்திருந்தது. 
அடுத்ததாக களம் இறங்கிய மார்கஸ் ஸ்டோனிஸ், டிவில்லியர்ஸ் இருவரும் ஜோடி சேர்ந்து அணியின் ஓட்டங்களை உயர்த்த தொடங்கினர்.  ஆட்டத்தின் கடைசி ஓவரில் 6 பந்துகளுக்கு 6 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது. இறுதியில் ஆட்டத்தின் 19.2 ஓவரில் டிவில்லியர்ஸ் 59 (38), மார்கஸ் ஸ்டோனிஸ் 28 (16) ஓட்டங்கள் எடுத்து தனது அணியை வெற்றி பெற செய்தனர். இதன் மூலம் பெங்களூரு அணி 19.2 ஓவரில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
https://www.tamilarul.net/
பஞ்சாப் அணி  வீரர்கள் சார்பில் அஸ்வின், மொஹமத் சமி தலா ஒரு விக்கெட்களை எடுத்திருந்தனர். 
இந்த ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூர் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் முதல் வெற்றியைப்பதிவுசெய்தது.
இப்போட்டியின் நாயகனாக டிவில்லியர்ஸ் தெரிவு செய்யப்பட்டார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.