பெண்ணின் சங்கிலியை அறுத்த நபரை மடக்கிப்பிடிப்பு!!

யாழ்ப்பாணம், வல்வெட்டிதுறைப் பகுதியில் பெண் ஒருவரின் சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பியோடிய நபர் ஒருவரை பொலிசார் துரத்திப் பிடித்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (13.04.2019) இரவு இடம்பெற்றது.

வல்வெட்டித்துறை பகுதியில் சென்று கொண்டிருந்த பெண் ஒருவரின் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அறுத்துச் சென்றதாக வல்வெட்டித்துறை பொலிசார் மூலம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவிற்கு தகவல் வழங்கப்பட்டது.
இதனை அடுத்து துரிதமாக செயற்பட்ட புலனாய்வுப் பிரிவினர் மந்திகை  - துன்னாலைக்கு இடைப்பட்ட அல்லையம்பதி பகுதியில் வைத்து சங்கிலியை அறுத்த வழிப்பறிக் கொள்ளையரை மடக்கிப் பிடித்து நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.