எவரெஸ்ட் சிகரத்திற்கு அருகில் விபத்து!!

எவரெஸ்ட் சிகரத்திற்கு அருகிலுள்ள லூக்லா விமான நிலையத்தில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.


சிறிய ரக விமானம் ஒன்று ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்று இரண்டு ஹெலிகொப்டர்கள் மீது மோதியதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காத்மண்டு நோக்கிப் புறப்பட்ட சிறிய ரக விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர்.

எவரெஸ்ட் சிகரத்தில் ஏற விரும்பும் ஆயிரக்கணக்கான மலையேறிகளுக்கு, லூக்லா விமான நிலையம் சேவையாற்றி வருகிறது.

எனினும், விமானங்கள் தரையிறங்கவும் புறப்படவும், உலகின் மிகவும் கடினமான ஓடுபாதைகளில் ஒன்றைக் கொண்டது லூக்லா விமான நிலையம் என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.