மக்களவை தேர்தல்: தமிழகம்- புதுச்சேரியில் தேர்தல் பிரசாரம் நிறைவு!

தமிழகத்தில் 39 மக்களவை மற்றும் 18 சட்டபேரவை தொகுதிகளுக்கான தேர்தல் பிரசார நடவடிக்கைகள் அனைத்தும் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணியும் நிறைவுக்கு வரவுள்ளது.



தமிழகம், புதுச்சேரியிலுள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் எதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெறவுள்ளது. அத்துடன், தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்டப் பேரவை தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கும் புதுச்சேரியில் ஒரு சட்டப் பேரவைத் தொகுதிக்கும் இடைத்தேர்தலும் நடத்தப்படவுள்ளது.

இதை முன்னிட்டு கடந்த ஒரு மாதமாக தமிழகம் முழுவதும் அரசியல் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.  பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்களும் பிரச்சாரத்துக்கு வந்து சென்றனர்.

தேர்தல் பிரசார நடவடிக்கைகள் ஓய்ந்த பின்னர், பிரச்சாரம் செய்தால் 2 ஆண்டு சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிரச்சாரம் முடிந்ததும் தொகுதிக்கு சம்பந்தமில்லாத வெளியாட்கள் உடனடியாக வெளியேற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் விதிகளின்படி, வாக்குப்பதிவு முடியும் நேரத்துக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக பிரச்சாரம் உள்ளிட்ட நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்.

அதன் படி, தமிழகத்தில் இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது. அதைத் தொடர்ந்து நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடக்கிறது. இதனால் அரசியல் கட்சித் தலைவர்களும், வேட்பாளர்களும் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மதுரையில் மாத்திரம் எதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெறும் தேர்தலில் காலை 7 மணி முதல் இரவு 8 மணிவரை வாக்களிக்க சந்தர்பம் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

தேர்தலை கண்காணிக்க சென்னை தேர்தல் ஆணையகத்தில் விசேட கட்டுபாட்டு அறை உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நாளைய தினம் வாக்களிப்பு பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டுச செல்லப்படவுள்ளன.

தமிழகத்தில் நடைபெறும் தேர்தலில், தபால் மூலம் வாக்களிக்க இரண்டு இலட்சத்து 34 ஆயிரத்து 413 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.