பிரிவினைகள் இன்றி நினைவேந்தல் நிகழ்வுகளை அனுஷ்டிக்க தீர்மானம்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை எந்தவித பிரிவினைகளும் இன்றி அனுஷ்டிக்க கரைதுறைப்பற்று பிரதேச சபையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


அதற்கமைய இதற்காக உருவாக்கப்பட்டுள்ள நினைவேந்தல் குழுவுடன் இன்று (வியாழக்கிழமை) விசேட கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.

முல்லைத்தீவு, கரைதுறைப்பற்று பிரதேச சபை கூட்டம் நேற்று மாலை அனைத்து கட்சிகளின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.

இதன்போது யுத்தத்தில் உயிர்நீத்த அனைத்து மக்களுக்குமான நிகழ்வை எந்தவிதமான பாகுபாடும் பிரிவினைகளும் இன்றி அனுஷ்டிக்க முடிவு செய்யப்பட்டது.

முள்ளிவாய்க்கால், கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதி என்பதால் நிகழ்வுக்கு முழு ஆதரவையும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் அரசியல் கட்சிகள் அனைத்திற்கும் அப்பாற்பட்டதாக இடம்பெற வேண்டிய விடயமென கரைதுரைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.தவராசா இதன்போது சுட்டிக்காட்டினார்.

முள்ளிவாய்கால் நினைவுதினம் எதிர்வரும் மே மாதம் 18ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.