வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட பிரதான சந்தேக நபர் கைது!

வடமராட்சியின் பல பகுதிகளில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த பிரதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து தொலைபேசிகள், ஆவணங்கள் மீட்கப்பட்டதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று முந்தினம் செவ்வாய்க்கிழமை (16) நெல்லியடி பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரினால் மேற்படி பிரதான நபர் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் வடமராட்சி உள்ளிட்ட பகுதிகளில் கொள்ளையிடப்பட்ட ஆறு தொலைபேசிகள் , அடையாள அட்டைகள்,  சாரதி அனுமதிப்பத்திரம்,  வெளிநாட்டு வங்கி அட்டைகள் என்பன மீட்கப்பட்டதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.