மதூஷின் சகோதரருக்கு விளக்கமறியல்!!

பிரபல பாதாள உலகக்குழு தலைவர் மாகந்துரே மதூஷின் உறவுமுறை சகோதரர் ரொமேஷ்
 இன்று (வியாழக்கிழமை) காலை நீதிமன்றில் முன்லைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


மாகந்துரே மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்டவர்களில் அறுவர் நேற்று நாடுகடத்தப்பட்டிருந்தனர்.

அவர்களிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்கள் அனைவரும் சுற்றுலா விசா, தொழில் விசா, குடியேற்ற விசாவிலேயே டுபாய்க்கு சென்றுள்ளனர் என்பதுடன், இலங்கையில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் சம்பங்களுடனும் தொடர்புடையவர்களாகக் காணப்படுகின்றனர்.

இவர்களில் மாகந்துரே மதூஷின் உறவினர்கள் இருவரும் அடங்குகின்றனர்.
டுபாயில் இருந்து நாடுகடத்தப்பட்ட பாதாள உலகக்குழுத் தலைவர் மாகந்துரே மதூஷின் உறவு முறை சகோதரர் நிலான் ரொமேஷ் சமரசிங்க எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரை நீர்க்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.