17 வயது மாணவனை காணவில்லை!!

வவுனியா, விபுலானந்தா கல்லூரியில் கல்வி கற்கும் 17 வயது மாணவன் ஒருவனை காணவில்லை என வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


வவுனியா, உக்குளாங்குளத்தில் பகுதியில் வசித்து வந்த சதீஸ்வரன் கோபிகன் என்ற மாணவனே நேற்று முதல் இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
குறித்த மாணவன் வவுனியா, விபுலானந்தா கல்லூரியில் கல்வி கற்று கடந்த ஆண்டு சாதாரண தரப் பரீட்சை எழுதியிருந்த நிலையில் அண்மையில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியிருந்தன.  விடுமுறைக் காலப்பகுதியில் வீட்டுக்கு அருகாமையில் உள்ள தொழிற்பயிற்சி நிலையம் ஒன்றில் கல்வி கற்றுவந்த  நிலையில் காணாமல் போயுள்ளார். 
   
வீட்டில் இருந்து சென்ற மகன் நீண்ட நேரமாகியும் வராமையால் அவனை தேடினோம். அவனது நண்பர்களிடம் விசாரித்தோம். அவர்களும் மகனை காணவில்லை என தெரிவித்த நிலையில் இரவு மகன் காணாமல் போனமை தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை செய்துள்ளோம் என காணாமல் போன மாணவனின் தந்தை எஸ்.சதீஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த மாணவனை யாராவது அடையாளம் கண்டால் 0779169113 தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.
காணாமல் போன மாணவன் இறுதியாக வவுனியா வைரவப்புளியங்குளம் பகுதியில் நின்றுள்ளதாக பொலிசாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.