இலங்கையில் பேஸ்புக் முற்றாக முடக்கம்!!

இலங்கையில் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் முற்றாக முடக்கப்பட்டுள்ளது.


நாட்டில் இன்று காலை முதல் 8 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவங்களில் 187 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 400 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களை மையப்படுத்தி போலியான தகவல்கள் பதிவேற்றப்படுகின்றமையினால் தற்காலிகமாக சமூக வலைத்தலங்களை முடக்க அரசாங்கத்தால் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களினூடாக இன, மத வாதங்களைத் தூண்டும் வகையில் பதிவுகளை மேற்கொள்வதனால் மேலும் வெடிப்புச் சம்பவங்கள் கலவரமாக மாறிவிடுமோ என்ற அச்சத்தில் சமூக வலைத்தளங்கள் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.