வெளிநாட்டு உளவுப் பிரிவு ஆபத்தானது!!

வெளிநாட்டு உளவுப் பிரிவினரின் ஒத்துழைப்பினைப் பெற்றுக் கொண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்வது ஆபத்தானது என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.


வெளிநாட்டு உளவுச் சேவை அதிகாரிகள் இலங்கையில் செயற்படுவதற்கு அனுமதிக்கக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமைகளுக்கு தீர்வு காணக்கூடிய ஆற்றல் இலங்கை இராணுவப் படையினருக்கு உண்டு என அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு உளவுப் பிரிவினர் இலங்கையில் விசாரணை நடத்துவது பிரச்சினைகளை மேலும் சிக்கலுக்குரியதாக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐ.எஸ் தீவிரவாதிகளை சர்வதேச ரீதியில் போஷித்த தரப்பினர் இலங்கையில் உளவுப் பணிகளில் ஈடுபடுத்த அனுமதிப்பது கள்வனின் தாயிடம் களவு பற்றி மை வெளிச்சம் பார்ப்பதற்கு நிகரானது என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.