ஐ எஸ் பயங்கரவாதியின் இறுவெட்டுகளை வைத்திருந்தவர் கைது!!

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஐ எஸ் ஐ எஸ் பயங்கரவாதியான சஹ்ரான் காசிமின் உரையாற்றிய பதினாறு இறுவெட்டுகளை தம் வசம் வைத்திருந்த நபர் ஒருவரை இன்று(29) கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கந்தளாய், பேராறு பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். கந்தளாய் பிரதேசத்தில் இன்றைய நாள் முழுவதும் திடிர் சோதனை நடவடிக்கைகள் வீடு வீடாகச் சென்று கந்தளாய் பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இந் நிலையிலே பதினாறு இறுவட்டுகளுடன் சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பாதுகாப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்தேக நபர் காத்தான்குடி பகுதியை பூர்வீகமாக கொண்டதோடு, கந்தளாய் பகுதியில் தொழில் மேற்கொண்டு வந்துள்ளார். இராணுவத்தினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் படையினரால் சோதனை மேற்கொண்ட போதே பயங்கரவாதி சஹ்ரான் காசிமின் உரையாற்றிய இறுவெட்டுகள் 16 வைத்திருந்த நிலையில் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரை கந்தளாய் பொலிஸில் தடுத்து வைத்துள்ளதோடு, தேசிய புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.