குண்டு வெடிப்புக்களில் பலியான வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!!

கடந்த 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களில் பலியான வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், இதுவரையில் தாக்குதல்களில் கொல்லப்பட்ட 42 வெளிநாட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அந்த எண்ணிக்கை 54ஆக அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

12 வெளிநாட்டவர்கள் குண்டு வெடிப்புக்களுக்குப் பின்னர் காணாமல் போயுள்ளதுடன், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இதுவரை அடையாளம் காணப்படாமல் உள்ள சடலங்களில் இவர்களின் சடலங்களும் இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இதனால், உயிரிழந்த வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் 5 வெளிநாட்டவர்கள் இன்னும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.