வவுனியாவில் வாளுடன் ஒருவர் கைது.!!

வவுனியாவில் இன்று பொலிசாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் வாள்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்..

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இன்று (30.04) மதியம் 12.30 மணியளவில் வவுனியா பட்டானிசூர் பகுதியில் நெளுக்குள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.ஐ.கிப்ஸ்சிறி திஸாநாயக்க தலைமையில் லலித் மற்றும் ஜானக ஆகியோரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது வீட்டுக்கு முன்னால் காணப்படும் கால்வாயினுள்  குழாய்க்குள் அடைக்கப்பட்ட நிலையில் இரண்டு வாள்கள் கண்டெடுக்கப்பட்டதனால் சந்தேகத்தின் பேரில்  பட்டானிசூர் பகுதியை சேர்ந்த 39 வயதுடைய ஒருவரை பொலிஸார் கைது செய்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவரிடமிருந்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் குறித்த நபர் மீன் வியாபாரம் செய்பவர் எனவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்றைய தினம் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
வவுனியா பொலிஸ் நிலையத்தில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரி.எம்.எஸ்.தென்னகோன் தலைமையில் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மகிந்த வில்லுவராட்சி,  ஆகியோரால் ஊடகவியலாளர்களுக்கு காண்பிக்கப்பட்டிருந்தது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.