வடக்கில் வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றிணைந்து போராட்டம்!!


வடக்கு மாகாணத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தின் ஏற்பாட்டில் வட. மாகாண வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றிணைந்து போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.

2019ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகளுக்கென நிதி ஒதுக்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி யாழ்.மாவட்டச் செயலகம் முன்பாக இன்று (புதன்கிழமை) காலை 9 மணி முதல் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதுவரை வேலையற்ற பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படாமைக்கு போராட்டக்காரர்கள் இதன்போது எதிர்ப்பு வெளியிட்டனர்.

‘30000 ஆசிரியர் வெற்றிடமிருந்தும் பட்டதாரி நியமனம் எங்கே?’, ‘நாட்டில் ஜனநாயகமாம் தொழிலுரிமை கிடையாதாம் இதுவா நல்லாட்சி’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை கைகளில் ஏந்தியவாறு ஆரப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.