பயிற்சியின் போது நேர்ந்த பரிதாபம்!


போட்டிக்காக பயிற்சியில் ஈடுபட்ட சைக்கிள் ஓட்ட வீரர் வாகனம் ஒன்று மோதி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் கேரதீவு சங்குப்பிட்டிப் பாலத்துக்கு அண்மையில் இடம்பெற்றது. சைக்கிள் ஓட்டப் போட்டிகளில் நீண்ட கால அனுபவமுடைய தாவடி தெற்கைச் சேர்ந்த விமல்ராஜ் (40) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நாவற்குழி ஊடாக ஏ–32 சாலையில் பயிற்சியில் ஈடுபட்ட வேளையில் வாகனம் மோதியது எனத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.